ஆய்வு

வேலை காரணமாக கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு சிங்கப்பூர் ஊழியர்கள் வெளிநாடு செல்லத் தயாராக இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
மொடர்னா சிங்கப்பூர், ‘யூகவ்’ அமைப்புடன் இணைந்து வெளியிட்ட புதிய ஆய்வின் முடிவில், சிங்கப்பூரில் உள்ள மூத்தோரில் 40 விழுக்காட்டினர், மேம்படுத்தப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதற்கான எண்ணம் ஏதுமில்லை என்று கூறியதாகத் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரிலும் இந்த வட்டாரத்திலும் மேற்கொள்ளப்பட்ட கருத்தாய்வுகளில் போதைப்பொருள் கடத்துவோருக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்திருப்பதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் ‘லிம்போமா’ எனப்படும் நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் குறைந்தது மூவரில் ஒருவர் ஐந்தாண்டுகளுக்குள் உயிரிழக்கின்றனர் எனச் சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் நிலைய ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜெர்மனியில் தமிழ் இலக்கியங்களின் பொருள் தொகுப்புகளுக்கான மின்னிலக்கப் பேரகராதி தயாரிக்கும் மாபெரும் திட்டத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறார் சிங்கப்பூரைச் சேர்ந்த மானசா விஸ்வேஸ்வரன்.